Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பா.ஜ.க.விலிருந்து கல்யான் சிங் விலகல்

Published on செவ்வாய், 20 ஜனவரி, 2009 1/20/2009 07:53:00 PM // ,

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து உத்திர பிரதேச மாநில முதல்வர் கல்யான் சிங் அந்தக் கட்சியி்ல் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக இன்று அறிவித்தார்.


பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்தது தான் செய்த மாபெரும் தவறு என்றும், பா.ஜ.க.வில் தன்னை அவமானப்படுத்தினர் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 76 வயதாகும் கல்யான் சிங் தற்போது பா.ஜ.க.வி்ன் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். 1992ஆம் ஆண்டு பாபரி மசூதி இடிக்கப்பட்ட போது அம்மாநில முதல்வராக இருந்தார்.

லோத் எனப்படும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவரான கல்யான் சிங் பா.ஜ.க.விலிருந்து விலகியிருப்பது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று டெல்லியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவை இவர் சந்தித்துப் பேசியதாகவும், முலாயம் இவருக்கும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் தருவதாக வாக்களித்ததாகவும் செய்திகள் வெளியாகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!