Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

மைக்ரோஸாப்ட் நிறுவனத்தில்

Published on வெள்ளி, 23 ஜனவரி, 2009 1/23/2009 08:28:00 AM // , , ,

அமெரிக்க கணிணி நிறுவனமான மைக்ரோஸாப்ட் தமது ஊழியர்களில் 5000 பேரை வேலையிலிருந்து நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. அவர்களில் 1400 பேர் உடனடியாகவும் மற்றவர்கள் அடுத்த 18 மாதங்களில் படிப்படியாகவும் நிறுத்தப் படுவர். மெதுவடைந்திருக்கும் பொருளியல் சூழலும் வாடிக்கையாளர்கள் தொழில்நுட்பத்தில் செலவிடும் தொகை வெகுவாகக் குறைந்து விட்டதுமே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை அந்நிறுவனத்தின் நிகர இலாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 விழுக்காடு குறைந்து விட்டதாகத் தெரிவிக்கிறது. செலவுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இந்த ஆட்குறைப்பு செய்யப் படுகிறது.

அந்நிறுவனத்தில் ஆய்வு, சந்தைப் படுத்தல், விற்பனை, நிதி, சட்டம், மனிதவளம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப் படுவர் என்று தெரிகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!