Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

மும்பையின் தாராவி பகுதி

Published on செவ்வாய், 20 ஜனவரி, 2009 1/20/2009 08:08:00 PM // ,

மும்பையில் உள்ள தராவி என்றழைக்கப்படும் பகுதி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். ஒழுங்கற்ற வீதிகள், வீதி தோறும் குப்பைகள் என்று சுகாதாரக் கேட்டுடன் உள்ள இப்பகுதி ஆசியாவின் மிகப் பெரும் குடிசைப் பகுதியாகும். இந்தப் பகுதியை அழகுபடுத்தப் போவதாக மகாராஷ்டிர அரசு இன்று அறிவித்துள்ளது.


இதற்காக உலகளாவிய அளவில் டெண்டர் விடப்படும் என்று மாநில வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று அமைச்சர் பிரீத்தம் குமார் தெரிவித்தார். மகாராஷ்டிர அரசு 2009ஆம் ஆண்டை "வீடுகளுக்கான ஆண்டு" என்று அறிவித்துள்ளதாகவும், இந்த ஆண்டில் தனியாருடன் இணைந்து வீட்டு வசதிகளை ஏற்படுத்தித் தருவோம் என்றும் அவர் கூறினார். இரண்டு ஆண்டுகளில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!