Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சிபுசோரன் தேர்தலில் தோல்வியுற்றார்

Published on வியாழன், 8 ஜனவரி, 2009 1/08/2009 10:45:00 PM //

.
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜார்கண்ட் முக்திமோர்ச்சா கட்சியின் தலைவர் சிபுசோரன் தேர்தலில் தோல்வியுற்றார்.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி, முதலமைச்சராகப் பதவியேற்ற இவர் தேர்தல் ஆணைய விதிகளின்படி, சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.இதற்காக அவர் கடந்த 3 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலலில் போட்டியிட்டார்.

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், சிபுசோரன் 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து ஜார்கண்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண பதார் வெற்றிபெற்றுள்ளார். இடைத்தேர்தல் முடிவு சிபுசோரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சிபுசோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags:

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!