Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பேங்காக் இரவு விடுதி தீ விபத்தில் 59 பேர் மரணம்

Published on வியாழன், 1 ஜனவரி, 2009 1/01/2009 05:16:00 AM //

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் இரவு விடுதி ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் மரணமடைந்தனர். மேலும் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.


பேங்காக்கிலுள்ள பிரபலமான 'சந்திகா' எனும் இரவு விடுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக 1000-த்திற்கும் அதிகமானோர் கூடியிருந்தபோது நள்ளிரவு 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலிலும் புகை மூட்டத்தாலும் மூச்சுத் திணறி 53 பேர் அதே இடத்தில் இறந்தனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் இறந்தனர்.

காயமடைந்தவர்கள் நகரெங்கிலும் உள்ள 14 மருத்துவமனைகளுக்கு அனுப்பப் பட்டு சிகிச்சை அளிக்கப் படுகின்றனர்.

இரண்டு தளங்களைக் கொண்ட விடுதிக் கட்டிடத்தில் முதல் தளத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமைக்கப் பட்டிருந்த மேடைக்கு அருகில் தீப்பற்றியதாக தெரிகிறது. இது பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!