Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கம்யூனிஸ்ட் தொண்டர் குண்டுவீசி கொலை!

Published on புதன், 31 டிசம்பர், 2008 12/31/2008 10:57:00 PM //


கேரள மாநிலம் கண்ணூரிலுள்ள தலச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் வீசிய குண்டில் சி.பி.எம் தொண்டர் கொல்லப்பட்டார். பானூர் பகுதியில் பாஜக - சி.பி.எம்மினரிடையே நடந்த மோதலின் தொடர்ச்சியாக பழிவாங்கும் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.


குண்டு வீச்சில் கொல்லப்பட்டவர், சி.பி.எம் திருவங்காடு தலாயி லோக்கல் கமிட்டி செயலாளரான மதேஷ் ஆவார். சம்பவத்தைத் தொடர்ந்து பானூர், சொக்லி, கொளவன்னூர், கதிரூர், தலச்சேரி, மட்டன்னூர் ஆகிய காவல்துறை எல்லைகளுக்குள் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சி.பி.எம் தொண்டர் கொலையைக் கண்டித்து தலச்சேரி மற்றும் அதனைச் சுற்றிய பஞ்சாயத்துப் பகுதிகளில் நாளைக் கடையடைப்புப் போராட்டத்திற்கு சி.பி.எம் அழைப்பு விடுத்துள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!