Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

பாலஸ்தீனில் மசூதி உள்பட 20 இடங்களில்

Published on வெள்ளி, 2 ஜனவரி, 2009 1/02/2009 08:36:00 PM //

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த ஒரு வாரமாக விமான தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. அதன் கடற்படை கப்பலிலிருந்தும் தாக்குதல் தொடுக்கப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை 428 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 2100க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப் பட்டோரில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான நிசார் ரய்யான் மற்றும் அவரது குடும்பத்தினரும் அடங்குவர்.


ஏழாம் நாளான இன்று காஸா பகுதியில் உள்ள மசூதி ஒன்றும் ஹமாஸ் தலைவர்களின் வீடுகளும் குறிவைத்து தாக்கப் பட்டன. தாக்கப்பட்ட மசூதியில் ஹமாஸ் ஆதரவாளர்கள் பதுங்கியிருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

இந்நிலையில் இன்று ஹமாஸ் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதலைத் தொடுத்தது. சுமார் 40 கி.மீ.தூரம் சென்ற இந்த ஏவுகணைகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஒரு நகரில் விழுந்ததாகவும் இதில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!