Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

வெடிகுண்டு மிரட்டல் ஆசாமி கைது

Published on: வியாழன், 18 டிசம்பர், 2008 //
சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் 15ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று சில நாட்களுக்கு முன் சென்னை எஸ்.பி. (சி.பி.ஐ. ) ராஜீவின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அனைத்து இரயில் நிலையங்களிலும் சோதனை செய்யப்பட்டபோது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

புரளியாய் தகவல் அனுப்பிய ஆசாமி யார் என்பதைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைகப்பட்டு புலனாய்வு நடைபெற்றது. தகவல் அனுப்ப ஆசாமி பயன்படுத்திய எண்கள் 97914 80867 மற்றும் 97896 05227 . இந்த எண்கள் வசந்த் என்பவர் பெயரில் வாங்கப்பட்டு இருந்தது. அவரிடம் நடைபெற்ற விசாரணையில், குடும்பப் பிரச்சனையின் காரணமாக வசந்த்தை காவல் துறையில் சிக்க வைக்க அவரது உறவினரான செல்வேந்திரன் என்பவரே இப்படிச் செய்துள்ளார் என்ற முடிவுக்கு வந்த காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்.

10 ரஷ்ய போர் விமானங்கள் இலவசம்

Published on: //
ரஷ்யா லெபனான் நாட்டிற்கு தாங்கள் உபயோகித்த 10 மிக்-29 வகை போர் விமானங்களை அன்பளிப்பாக அளிக்கிறது. இவ்வகை விமானங்கள் ரஷ்ய போர் விமானங்களிலேயே சிறந்த ஒன்றும் அதன் ஏற்றுமதி விலை 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் கூறப்படுகிறது.

லெபானான் இராணுவத்திற்குத் தேவையான போர் தளவாடங்கள் விற்பனை ஒப்பந்தம் சம்பந்தமாக லெபனான் வந்த ரஷ்ய இராணுவ அதிகாரி மிகைல் திர்மித்ரியேவ் இத்தகவலைக் கூறினார்.

சீனா - பொருளாதார சீர்திருத்தம் 30ஆம் ஆண்டு

Published on: //
கம்யூனிச கொள்கைகளைக் கொண்டு ஆட்சி நடத்தப்பட்டு வரும் சீனா, தன்னுடை பொருளாதாரத்தில் சில மாற்றங்களைக் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தத் தொடங்கியது. இந்த மாற்றத்தின் 30ஆம் ஆண்டு விழா இன்று பெய்ஜிங்கில் சீன கம்யூனிசக் கட்சியின் தலைவரும் அந்நாட்டின் அதிபருமான ஹூஜின்டாவின் உரையுடன் நடைபெற்றது.

கடந்த முப்பதாண்டுகளின் சீனப் பொருளதார வளர்ச்சியைப் புகழ்ந்த அவர், பொருளாதார சீர்திருத்தத்தின் மூலமே இதனை அடைந்தோம். அதனை மேலும் தொடர்வோம் எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் இன்று சீனப் பொருளாதாரம் இருக்கிறது. 1978ஆம் ஆண்டு சீன தனிநபர் வருமானம் 380 யுவான் என்ற நிலையில் இருந்து இன்று அதன் தனிநபர் வருமானம் 19,000 யுவான் என்ற அளவில் மாற்றம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

செசன்யா: 2 ரஷ்ய வீரர்கள் பலி

Published on: //
செசன்ய தலைநகர் குரோன்ஜியிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அர்குன் நகரில் ரஷ்ய வீரர்களுக்கும் செசன்ய விடுதலை அமைபினருக்கும் இடையே நடந்த சன்டையில் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரும் காவலர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

மேலும் இரு காவல் அதிகரிகளும் நான்கு வீரர்களும் இந்தச் சன்டையில் காயமுற்றதாகக் கூறப்படுகிறது.

குடியரசு நாள் பாதுகாப்பு ஏற்பாடு

Published on: //
குடியரசு தின பாதுகாப்பை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில், 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராஜ்பாத் ஒன்றை கிலோ தூரம் கொண்டது. இங்குதான் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும். அப்போது தீவிரவாத தாக்குதல் நடந்து விடாமல் தடுக்கும் பொருட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி செல்லும் சாலை, இந்தியா கேட் உள்ளிட்ட ராஜ்பாத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இந்த கண்காணிப்பு டிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.இந்த சாலை முழுவதையும் துல்லியமாக கண்காணிக்கக் கூடிய வகையில் இவை பொருத்தப்படுகிறது.

ஜனவரி 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்த கண்காணிப்பு டிவி கேமராக்கள் செயல்பாட்டில் இருக்கும்.நாலாபக்கமும் சுழலக் கூடிய பான் டில்ட் ஜூம் கேமராக்கள் இதில் இடம் பெறும். ராஜ்பாத் பகுதியில் இந்த 22 கேமராக்களையும் கண்காணிக்க பிரமாண்டமான கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது.

மும்பைத் தாக்குதலின் எதிரொலியாக எந்தவித தாக்குதலும் நடந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் இந்த கேமராக்கள் பொருத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!