Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

வெடிகுண்டு மிரட்டல் ஆசாமி

Published on வியாழன், 18 டிசம்பர், 2008 12/18/2008 05:05:00 PM //

சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் 15ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று சில நாட்களுக்கு முன் சென்னை எஸ்.பி. (சி.பி.ஐ. ) ராஜீவின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அனைத்து இரயில் நிலையங்களிலும் சோதனை செய்யப்பட்டபோது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

புரளியாய் தகவல் அனுப்பிய ஆசாமி யார் என்பதைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைகப்பட்டு புலனாய்வு நடைபெற்றது. தகவல் அனுப்ப ஆசாமி பயன்படுத்திய எண்கள் 97914 80867 மற்றும் 97896 05227 . இந்த எண்கள் வசந்த் என்பவர் பெயரில் வாங்கப்பட்டு இருந்தது. அவரிடம் நடைபெற்ற விசாரணையில், குடும்பப் பிரச்சனையின் காரணமாக வசந்த்தை காவல் துறையில் சிக்க வைக்க அவரது உறவினரான செல்வேந்திரன் என்பவரே இப்படிச் செய்துள்ளார் என்ற முடிவுக்கு வந்த காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!