Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கேரளம்: பாஜக - சி.பி.எம் மோதல்!

Published on புதன், 31 டிசம்பர், 2008 12/31/2008 08:12:00 PM //

கேரளத்திலுள்ள கண்ணூர் மாவட்டத்தில் பா.ஜ.க மற்றும் சி.பி.எம் கட்சிகளுக்கு இடையே நடந்த மோதலில் நான்கு பேருக்கு வெட்டு.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், பா.ஜ.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே நடக்கும் அரசியல் மோதல்களுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகும். இங்கு அடிக்கடி இவ்விரு கட்சியினருக்கும் இடையே மோதல் நடப்பது வழக்கம்.

இதற்காகவே இவ்விரு கட்சியினரும் வெடிகுண்டு, வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை ஆங்காங்கே சேகரித்து வைப்பர். கடந்த இரு மாதங்களில் இம்மாவட்டத்திலிருந்து பலமுறை குவியல் குவியலாக கேரள காவல்துறை வெடிகுண்டுகளைக் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் நேற்றும் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பானூரில் இவ்விரு கட்சியினருக்குமிடையே மொதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களைக் கொன்டு தாக்கிக் கொண்டனர்.

இதில் நாங்கு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த நாணு, ரவி ஆகியவர்களுக்குப் பலத்தக் காயம் ஏற்பட்டது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!