Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இலங்கை தமிழர் சென்னையில் கைது

Published on புதன், 31 டிசம்பர், 2008 12/31/2008 12:20:00 PM //

இலங்கையைச் சேர்ந்த திலீபன் (வயது 30) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு தொலை தொடர்பு சாதனங்களைக் கடத்த முயன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இலங்கையைச் சேர்ந்த இவர் இதற்கு முன் சுவிட்சர்லாந்தில் பணி புரிந்து இலங்கை திரும்பியவர் என்றும் காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக் கிழமையன்று ஆண்டனி (வயது 32) என்பவர் சென்னையில் கைது செய்யப் பட்டார். அவரிடமிருந்து சாட்டிலைட் போன்கள், GPS கருவிகள், அமோனியம் நிட்ரேட் போன்றவை கைப்பற்றப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!