Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

"தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது!" - கலிதா ஜியா அறிவிப்பு

Published on புதன், 31 டிசம்பர், 2008 12/31/2008 08:34:00 AM //

பங்களாதேஷில் அண்மையில் நடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசிய கட்சி படு தோல்வி அடைந்தது. தனது கட்சித் தலைவர்களுடன் அவசரக் கூட்டம் நடத்திய ஜியா, 'தேர்தல் முடிகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல' என்று தேசிய தொலைக்காட்சியில் அறிவித்தார்.

'இந்தத் தேர்தல் முடிவுகளை மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதிக பட்ச எண்ணிக்கையில் வாக்குகள் பதிவு செய்யப் பட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருப்பதும் நம்பத் தகுந்தது அல்ல. வாக்குப் பதிவில் தில்லுமுல்லுகள் நடந்திக்க வாய்ப்பிருக்கிறது' என்றும் கலிதா ஜியா தெரிவித்தார்.

300 உறுப்பினர்களைக் கொண்ட பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் கலிதா ஜியாவின் கட்சி 29 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. ஷேக் ஹஸினா தலைமையிலான அவாமி லீக் கட்சி 230 இடங்களை வென்று ஆட்சி அமைக்கிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!