Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

5வது நாளாகத் தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்

Published on புதன், 31 டிசம்பர், 2008 12/31/2008 12:52:00 PM //


பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் மீது இஸ்ரேல் ஐந்தாவது நாளாக இன்றும் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது. பாலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் அலுவலகம் மற்றும் சுரங்கப் பாதைகள் மீதும் குண்டுகளைப் பொழிந்தது. இதுவரை 400க்கும் அதிகமானோர் கொல்லப் பட்டுள்ளதாகவும் சுமார் 1750 பேர் காயமுற்றள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதலை நிறுத்தாவிட்டால் காஸா மீதாக தாக்குதல் வாரக்கணக்கில் நீடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலக நாடுகள் மற்றும் உலக நாடுகளின் அமைப்புகள் பலவும் கண்டனம் தெரிவித்ததுடன் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இரு தரப்பும் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நேற்று கூடிய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, வளைகுடா வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு மற்றும் Quartet எனப்படும் அமரிக்கா, ஐரோப்பிய யூனியன், இரஷ்யா, ஐ.நா. சபை போன்றவையும் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளன.

48 மணி நேர தாக்குதல் நிறுத்த திட்டம் ஒன்றை பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியதாகவும் அதனை இஸ்ரேலிய அரசு பரிசீலித்தது வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பாக விவாதிக்க இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் லிவ்னி நாளை பிரான்சு செல்கிறார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!