Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அந்துலே ராஜினாமா

Published on வெள்ளி, 19 டிசம்பர், 2008 12/19/2008 11:10:00 AM //

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏ. ஆர். அந்துலே, சமீபத்தில் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது உயிரிழந்த கார்கரேயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கார்கரே தீவிரவாதிகளால்தான் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்று அவர் சந்தேகம் எழுப்பியிருந்தார். அரசியல் வட்டாரத்தில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நேற்று அவர் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில்,

ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டதில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதை நான் மறுக்கவில்லை, சந்தேகப்படவில்லை. அதேபோல கார்கரேவின் தியாகத்தையும் நான் சந்தேகப்படவில்லை.

உண்மையில், கார்கரேவை குறி வைத்துக் கொள்ள தீவிரவாதிகளுக்கு எந்த நோக்கமும் இல்லை. கார்கரே தீவிரவாதத்திற்குத்தான் பலியானாரா அல்லது தீவிரவாதத்தைத் தாண்டி வேறு காரணம் இருந்ததா என்பதுதான் எனக்குப் புரியாமல் உள்ளது. சில வழக்குகளில் முஸ்லிம் அல்லாதோர் சம்பந்தப்பட்டிருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

தீவிரவாதத்தின் அடி ஆழத்திற்குச் செல்ல முயலும் யாரையும் தீவிரவாதிகள் நிச்சயம் குறி வைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறியிருந்தார் அந்துலே. இந்த பதிலில் பிரதமர் திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. இதனையடுத்து ஏ.ஆர். அந்துலே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!