Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மாலேகாவ்: பாண்டே ஒப்புதல் வாக்குமூலம்!

Published on புதன், 31 டிசம்பர், 2008 12/31/2008 02:10:00 PM //

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாகக் கைதுசெய்யப்பட்ட தயானந்த் பாண்டே, குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த மும்பை மும்பை தீவிரவாத தடுப்புப் படை தலைவர் கார்கரே, மும்பை தீவிரவாதத் தாக்குதலினிடையே கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மாலேகாவ் வழக்கில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

தற்பொழுது மீண்டும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மேலும் இரு இராணுவ உயர் அதிகாரிகளையும் மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேயின் சகோதரர் மகளையும் மும்பை தீவிரவாத தடுப்புப் படை விசாரணை செய்திருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையவராக கைது செய்யப்பட்ட இந்து அமைப்பு ஒன்றின் தலைவர் தயானந்த் பாண்டே, குண்டுவெடிப்பில் தனக்கு தொடர்புள்ளதை ஒப்புக்கொண்டதாக தீவிரவாதத் தடுப்புப்படை அடிஷனல் கமிஷனர் பரம்பீர் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

தயானத் பாண்டேயின் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதற்கான அனைத்து முறைகளையும் பேணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!