Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு

Published on செவ்வாய், 30 டிசம்பர், 2008 12/30/2008 12:53:00 PM //

கடந்த நான்கு நாட்களாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் அரசு அலுவலகங்கள், சிறைக் கூடம், தொலைக்காட்சி நிலையம், மசூதி என்று பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் குண்டுகளை வீசி வருகிறது. இதில் 350க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் நேற்று ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது ராக்கெட்களை வீசினர். இவை நீண்டதூரம் சென்று இஸ்ரேலின் உள்பகுதியைத் தாக்கியதாகவும் இதில் இராணுவ வீரர் ஒருவர் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. காஸா பகுதியிலிருந்து 23 கி.மீ.தூரத்தில் உள்ள அஷ்துத் எனும் ஊரின் பேருந்து நிலையம் அருகே ஹமாஸ் வீசிய ராக்கெட் விழுந்து ஒரு பெண்மணி இற்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.


இரு தரப்பினரும் சன்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் இரு தரப்பினருக்கும் தம்முடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

காஸா பகுதி குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சார்கள் இன்று பாரிசில் கூடுகின்றனர். காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் அனுப்புவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!