Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

4ஆம் நாளாகத் தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்

Published on செவ்வாய், 30 டிசம்பர், 2008 12/30/2008 12:32:00 PM //


பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் நான்காவது நாளாக இன்றும் தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளது. இன்றைய வான் வெளித் தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதுவரை 350க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 62 பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார். காஸாவைச் சுற்றிலும் இஸ்ரேலிய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை மற்றும் இடப் பற்றாக்குறை காரணமாக பெருங்குழப்பம் நிலவுவதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது. இதனையடுத்து காஸாவிலிருந்து மருத்துவ உதவி பெறுவதற்காகவும் உதவிப் பொருள்களை எடுத்துச் செல்லவும் எகிப்து ரபாஹ் எல்லைப் பகுதியில் அனுமதி அளிக்கிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!