Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

300 பேர் கடலில் மூழ்கி இறந்ததாக சந்தேகம்!

Published on புதன், 31 டிசம்பர், 2008 12/31/2008 07:55:00 PM //

சட்டத்துக்கு மீறி கடல்மார்க்கமாக மலேசியாவில் குடியேற முயன்ற முன்னூறுக்கு மேற்பட்டோர் மூழ்கி இறந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை 10 பேரில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்தமான் தீவுகளுக்கருகில் இவர்கள் பிரயாணம் செய்திருந்த படகு சென்றுக் கொண்டிருந்த வேளையில், திடீரென அடித்த பெருங்காற்றில் நிலைகுலைந்தப் படகு கவிழ்ந்ததால் இச்சம்பவம் ஏற்பட்டதாக எல்லைப் படையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.

இதுவரை 105 பேரைக் காப்பாற்றியிருப்பினும் 300க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளது உறுதியாகியுள்ளது. இவர்களில் 10 பேரில் உடல்களைச் சமீபத்தில் உள்ள பாறைகூட்டங்களுக்கு இடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

படகில் பயணம் செய்திருந்தவர்களில் பகளாதேஷ் மற்றும் மியான்மரில் உள்ளர்களே அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!