Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

வங்க தேசத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது

Published on திங்கள், 29 டிசம்பர், 2008 12/29/2008 09:53:00 AM //

7 ஆண்டுகளுக்குப் பின் வங்க தேசத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வங்க தேச நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என்றாலும் தேர்தல் முடிவுகள் நாளையே தெரிய வரும்.

முக்கிய அரசியல் கட்சிகளான அவாமி லீக் மற்றும் வங்காள தேசிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. முன்னதாக சனிக்கிழமையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. முன்னாள் பிரதமர்களான பேகம் கலீதா ஜியா மற்றும் ஷேக் ஹஸீனா வஜீத் ஆகியோர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

தேர்தல் பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரம் இராணுவத்தினர், 75 ஆயிரம் காவலர்கள், 6 ஆயிரம் சிறப்பு அதிரப்படை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர 2 இலட்சம் உள்ளூர் பார்வையாளர்களும் மற்றும் 2 ஆயிரம் காமென் வெல்த் பார்வையாளர்களும் தேர்தல் கன்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!