Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள்

Published on திங்கள், 29 டிசம்பர், 2008 12/29/2008 10:08:00 AM //





சனிக்கிழமை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் நடைபெற்ற சன்டையில் 50க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப் பட்டன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை விடுதலைப் புலிகள் நேற்று காட்சிப்படுத்தினர்.



இலகு இயந்திர துப்பாக்கிகள், T56 வகை துப்பாக்கிகள், கிரானைட்கள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டன.


சனிக்கிழமை கொல்லப்பட்ட இராணுவத்தினரில் 17 வயதே ஆன இலங்கை இராணுவ வீரரின் அடையாள அட்டையும் வெளியாகி உள்ளது. அவர் இந்த சன்டையில் கொல்லப்பட்டார்.

விடுதலைப்புலிகள் சிறுவர்களை சன்டையில் ஈடுபடுத்துகிறார்கள் என்று இலங்கை குற்றம் சாட்டி வந்த நிலையில் இலங்கை இராணுவத்தில் 17 வயதே நிரம்பியவர்களும் சன்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!