சிதம்பரம் அமெரிக்கப் பயணம் ரத்து
Published on ஞாயிறு, 11 ஜனவரி, 2009
1/11/2009 04:09:00 PM //
இந்தியா
மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அமெரிக்கா செல்ல இருப்பதாக கடந்த வாரம் செய்தி வெளியாகி இருந்தது. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் கான்டலீசா ரைசைச் சந்திக்க நேரம் கிடைக்காததால் உள்துறை அமைச்சர் தனது அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி அமெரிக்க செல்ல இருக்கும் நிலையில் இந்திய உள்துறை அமைச்சரின் பயணம் ரத்து செய்யப் பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஒபாமா பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில தலைவர்களில் ஜர்தாரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சிதம்பரம் வருகை குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் கேட்டபோது, சிதம்பரம் அவர்களை எந்நேரமும் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் தற்போது காஸா பிரச்சனையில் தனது கவனத்தைச் செலுத்தியிருப்பதால் கான்டலீசா ரைசுக்கு நேரம் இல்லை என்று கூறினார்.











0 comments