Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 08, 2025

காங்கிரஸ், தேசியவாத காங். இடையே தொகுதி உடன்பாடு!

மஹாராஷ்டிராவில் காங்., தேசியவாத காங். இடையே தொகுதி உடன்பாடு ஏற்ப்பட்டது. காங்கிரஸ் 26 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். கடந்த சில நாட்களாக இவ்விரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி இருந்த நிலையில் இந்த உடன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ...

தென் ஆப்ரிக்கா அதிரடி ரன்

தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா இடையேயான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வீரர்கள் அபாரமாக விளையாடி 651 ஓட்டங்கள் குவித்தனர். டீ வில்லர்ஸ் அதிரடியாக விளையாடி 164 குவித்தார், இதில் 12 பவுன்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். சற்று முன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆட துவங்கிய ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 33 ஒட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. ...

கச்ச தீவு புனித தலமாக இலங்கை

Published on: // ,

சர்ச்சைக்க்குறிய கச்ச தீவு பகுதியை புனித தலமாக இலங்கை தனது நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியா மற்றும் இலங்கைக்கு பிரச்சினைக்குரிய இடமாக இருந்து வந்த அப்பகுதி, 1976 ஆம் ஆண்டு, செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டாலும், இந்திய மீனவர்கள் எவ்வித தடையுமின்றி மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய இலங்கை மீனவர்களிடையே ஏற்படும் மோதல்கள் மற்றும் இலங்கை...

ச.ம.க. 15 தொகுதிகளில் போட்டி -

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "மக்களவை தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிட கட்சி நிர்வாகிகள் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்ற ஒரு கருத்து நிலவுகிறது.எனவே,...

சிறந்த வெளிநாட்டு வாழ் இந்தியராக பஃரீது ஜக்கரியா

Published on: // ,

CNN நிகழ்ச்சி அமைப்பாளர் பஃரீது ஜக்கரியா, அமெரிக்காவில் வசிக்கும் சிறந்த வெளிநாட்டு வாழ் இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகாளாக, அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர், பல்வேறு துறைகளில் பணி புரிந்து சாதனை படைத்து வருபவர்களை கண்டறிந்து இவ்விருதுகளை வழங்கிவருகிறது. பஃரீது ஜக்கரியா CNN தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. ...

இந்தியா அபாரம் - 32 ஆண்டுகளுக்குப் பின் நியூ. முதல் டெஸ்ட்

இந்தியா, நியூசிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. டோனி தலைமயில் சமீபகாலமாக அட்டகாசமாக அசத்தி வரும் இந்தியா, 32 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தை வென்றுள்ளது.இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முன்னனி வீரர்கள் அனவரும் பெவிலியன் திரும்ப, அதிரடி ஆட்டக்காரர் மெக்கெல்லம் சிறப்பாக விளையாடி 84 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய சுழல் பந்துவீச்சாளர்...

அமெரிக்க அதிபர் பங்கு சந்தையில் முதலீடு செய்து

Published on: // ,

தற்போதைய உலகலாவிய நிதி நெருக்கடியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சுமார் 248,000 அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார். அதிபர் ஆவதற்கு முன் பங்கு சந்தையில் முதலீடு செய்து இருந்த ஒபாமா, தற்போதைய நிதி நெருக்கடியில் மேற்குறிப்பிட்ட தொகையை இழந்துவிட்டதாக அவர் சார்பில் சமர்பிக்கப்பட்ட அவரின் சொத்து விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

வருணைக் கைவிடும் பா.ஜ.க.!

சர்ச்சைக்குரிய விதத்தில் வருண் பேசியதற்கு பா.ஜ.க., எந்த விதத்திலும் பொறுப்பில்லை என அக்கட்சி தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளது. உ.பி., மாநிலம் பிலிபித் தொகுதியில் பிரசாரத்தின் போது வருண்காந்தி பேசியது தொடர்பாக தேர்தல் கமிஷன் பா.ஜ.க.,வுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது .இந்த நோட்டீஸ் குறித்து கருத்து ‌தெரிவித்துள்ள பா.ஜ.க., வருண் பேச்சுக்கு நாங்கள் பொறுப்பல்ல, தேர்தல் கமிஷன் வருண் பேச்சு குறித்து தீவிரமாக ஆராய வேண்டும் . இதற்காக ஒரு...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!