Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பா.ஜ.க.வுக்கு தேர்தல் நிதி எங்கிருந்து வருகிறது?

Published on: ஞாயிறு, 15 மார்ச், 2009 // , , , , , ,
குஜராத்தின் சில்வசாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிரஸ்டு ஒன்றும், பிரச்சனைகளில் சிக்கிய குஜராத்தைச் சார்ந்த வணிக நிறுவனமும் பா.ஜ.க.வின் தேர்தல் நித பங்களிப்பில் முக்கியப் பங்கு வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை மட்டுமின்றி மேலும் சில மறைமுக உதவியுடன் 2003 முதல் 2007 வரை பா.ஜ.க. தேர்தல் நிதியாக 52.41 கோடி நிதி திரட்டியதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட ஆவணங்கள்படி பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் நிதியில் சில்வசா பொது மற்றும் அரசியல் விழிப்புணர்வு டிரஸ்டு வழங்கும் நிதியே பெரும்பான்மை பங்கு வகிக்கிறது. இந்த டிரஸ்டு பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே நிதி வழங்கியுள்ளதாகவும், வழங்கிய நிதி 9.5 கோடி ரூபாய் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த டிரஸ்டு ஸ்டெரிலைட் குழுமத்துடன் இணைந்த ஒரு டிரஸ்டாகும்.

கடந்த 2000ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சியின் போது இந்தி அரசின் பொதுத்துறை நிறுவனமான பால்கோ நிறுவனம் அனில் அகர்வாலின் ஸ்டெரிலைட் குழுமத்திற்கு விற்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

குஜராத்தின் அத்வாணி குழும நிறுவனங்களும் பாரதீய ஜனதா கட்சிக்குப் பெருமளவில் நிதி அளித்துள்ளது. 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் 4 கோடி ரூபாய் இந்த குழுமம் நிதி அளித்துள்ளது. வீடியேகான் குழுமம் 3.5 கோடியும், டாடா மற்றும் பிர்லா குழுமங்கள் சுமார் 5.63 கோடியும் நிதி அளித்துள்ளன. இவையன்றி சிறிய அளவிலான உதவிகள் செய்ததாக அகீக் கல்வி நிலையம், பால்தேவ் பார்க், ஷாஹ்தரா போன்ற நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1.5 கோடி ரூபாய் நிதி அளித்ததாகக் கூறப்படும் அகீக் கல்வி நிலையத்தின் முகவரியில் கல்வி நிலையம் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.

பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் விமான நிலைய விரிவாக்க ஒப்பந்தங்கள் பெற்ற விஜய் மல்லையாவின் ஷாவாலஸ் குழுமம், GMR குழுமம் மற்றும் பஜாஜ் குழுமம் போன்றவை தலா ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளன.

நிதி வழங்கியவர்கள் என்று பாரதீய ஜனதா கட்சி சமர்ப்பித்த ஆவனங்களில் பெரும்பாலும் நிதி வழங்கியவர்களின் முகவரிகள் குறிப்பிடப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்நாடு: 59 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார் மாநில தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா. அவர் தெரிவித்த செய்திகள் சில:
வாக்காளர் சரிபார்ப்பு பணியை 100 சதவிகிதம் மேற்கொண்டதில் வாக்காளர் எண்ணிக்கை 2004ன் 4.72 கோடியிலிருந்து 4.13 கோடியாக 2009ல் குறைந்துள்ளது.அதாவது 59 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.(12.5%)


மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளை மாற்றவும் 2 அல்லது 3 நாள்களில் அந்தப் பணியை முடிக்கவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் சத்தியகோபால் 18ம்தேதி புதன்கிழமை பொறுப்பேற்க உள்ளார்.ஆந்திரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் சிறந்த முறையில் அமல்படுத்தப்படுவதாக மத்திய தேர்தல் ஆணையம் கருத்துத் தெரிவித்துள்ளது. எனவே ஆந்திரத்தில் உள்ளது போல, இங்கும் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்படும்.


தேர்தலை அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்தி முடிப்பதில்தான் நான் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் முதல்வர் என் மீது கூறியுள்ள புகார்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
என்றும் நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

வீட்டுக் காவலில் நவாஸ் ஷரீப்!

பாகிஸ்தானின் எதிர்கட்சித் தலைவர் நவாஸ் இன்று வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளார். இது பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

நவாஸ் ஷரீப், அவரது சகோதரர் சபாஷ் ஷரீப் மற்றும் தங்களது கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளதாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நசீர் அகமது புட்டா லாஹூரில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கெதிரான பேரணி இன்று நடப்பதாக இருந்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!