Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 30, 2025

தமிழ்நாடு: 59 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

Published on ஞாயிறு, 15 மார்ச், 2009 3/15/2009 12:49:00 PM // , , , , , ,

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார் மாநில தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா. அவர் தெரிவித்த செய்திகள் சில:

வாக்காளர் சரிபார்ப்பு பணியை 100 சதவிகிதம் மேற்கொண்டதில் வாக்காளர் எண்ணிக்கை 2004ன் 4.72 கோடியிலிருந்து 4.13 கோடியாக 2009ல் குறைந்துள்ளது.அதாவது 59 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.(12.5%)


மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளை மாற்றவும் 2 அல்லது 3 நாள்களில் அந்தப் பணியை முடிக்கவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் சத்தியகோபால் 18ம்தேதி புதன்கிழமை பொறுப்பேற்க உள்ளார்.ஆந்திரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் சிறந்த முறையில் அமல்படுத்தப்படுவதாக மத்திய தேர்தல் ஆணையம் கருத்துத் தெரிவித்துள்ளது. எனவே ஆந்திரத்தில் உள்ளது போல, இங்கும் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்படும்.


தேர்தலை அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்தி முடிப்பதில்தான் நான் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் முதல்வர் என் மீது கூறியுள்ள புகார்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
என்றும் நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!