Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

விமானக் கடத்தல் முயற்சி முறியடிப்பு?

Published on: ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009 // , , ,

கோவாவிலிருந்து டில்லியை நோக்கிப் புறப்பட்ட விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தைச் சிலர் கடத்த முயல்கின்றனர் என்றச் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து விமானி கட்டுப்பாட்டு அறைக்குக் கொடுத்தத் தகவலின் பேரில் உடனடியாக தரை இறக்கப்பட்டது.விமானத்தைக் கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ...

கென்யா: எண்ணெய் லாரி வெடித்து 111 பேர் பலி!

கென்யாவில் கவிழ்ந்து விழுந்த எண்ணெய் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியதில் 111 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையோரமாக கவிழ்ந்து விழுந்துக் கிடந்த லாரியிலிருந்து வெளியே ஒழுகிக் கொண்டிருந்த எண்ணெயை அப்பகுதி மக்கள் போட்டியிட்டுச் சேகரித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக எண்ணெய் லாரி வெடித்துச் சிதறியதில் சுற்றி நின்றிருந்த மக்களில் சுமார் 111 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. ...

தாலிபான் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அமெரிக்காவுக்கு சாதகமான ஒருங்கிணைந்த ஆப்கானிஸ்தானை உருவாக்க முடியாது என அமெரிக்காவின் முன்னணி உளவு மற்றும் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு அமைவது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஆப்கானிஸ்தான் குறித்த ஒபாமாவின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்ற ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன.அமெரிக்க 5 இலட்சம் இராணுவத்தினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தாலும் அமெரிக்காவுக்கு சாதகமான ஒருங்கிணைந்த ஆப்கானிஸ்தானை...

கூகுள் தளத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

சர்ச் இஞ்சின் ஜாம்பவனான கூகுள் தளத்தில் இன்று தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் மூலம் தேடிய சர்ச் ரிஸல்ட் பக்கத்தில் பயனர் எவருக்கும் பயன் இல்லாத வகையில் அனைத்துத் தளங்களும் ஆபத்தானவை என்ற அறிவிப்பை வெளியிட்டது கூகுள். இதனால் எந்த ஒரு பயனரும் தனது தேடுதல் மூலம் தளங்களுக்குச் செல்ல இயலவில்லை. இந்த தொழில் நுட்பக் கோளாறு 40 நிமிடங்கள் வரை நீடித்தது. இணைய உலகின்...

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளை மூட அரசு

தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரி மற்றும் கல்லூரி விடுதிகளை காலவரையறை இன்றி மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இலங்கையில் விடுதலைப் புலியினருக்கும் இராணுவத்தினருக்கும் கடுமையான சன்டை நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவித்தமிழர்களும் பலியாகி வருகின்றனர். இலங்கையில் உடனடியாக சன்டை நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ அரசு மற்றும் அரசியில் கட்சிகள் கோரியும் இதுவரை சன்டை நிறுத்தம் ஏற்படவில்லை. இந்திய அரசு மெளனம் காத்து வருகிறது. இதனால்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!