Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

விப்ரோ நிறுவனத்திற்கு உலக வங்கி தடை

Published on: திங்கள், 12 ஜனவரி, 2009 // ,
இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ நிறுவனத்துடன் உலக வங்கி வணிகத் தொடர்பு கொள்வதற்கு நான்கு ஆண்டுகால தடை விதித்துள்ளது. உலக வங்கி வணிகத் தடை விதிக்கும் மூன்றாவது மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் விப்ரோ என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு முன் சத்யம் மற்றம் மெகா சாப்ட் ஆகிய நிறுவனங்களுக்குத் தடை விதித்திருந்தது.

உலக வங்கியின் ஊழியர்களுக்கு இந்த நிறுவனங்கள் இலஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி இந்த தடை விதிதக்கப் பட்டுள்ளது. இவையன்றி நெஸ்டார் பார்மாசூட்டிகல், கேப் இன்டர்நேஷனல், சுரேந்திர சிங் ஆகிய இந்திய நிறுவனங்களுக்கும் இந்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

சரக்குந்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

Published on: //
எட்டு நாட்களாக இந்தியா முழுவதும் நடைபெற்று வந்த சரக்குந்து வாகனங்கள் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அரசுக்கும் சரக்குந்து உரிமையாளர் சம்மேளனத்திற்கும் இடையே இன்று மதியம் நடைபெற்ற பேச்சு வார்த்தை சுமுகமாக அமைந்ததைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக சரக்குந்து உரிமையாளர் சம்மேளன செயலாளர் கூறினார். எந்த வகையான உடன்பாடுகள் அரசுக்கும் சம்மேளனத்திற்கும் இடையே ஏற்பட்டது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

கேம்பிரிட்ஜ் பல்கலை: இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டய கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க இருப்பதாக இன்று அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பெயரால் இந்த உதவித் தொகை அறியப்படும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் அலிசன் ரிச்சர்ட் கூறினார்.

உதவித் தொகை தேவைப்படும் மாணவர்களுக்கு அவர்கள் எந்தப் பிரிவு பாடம் படித்தாலும் கல்விக் கட்டணம் உள்பட மற்ற செலவுகளுக்கு இந்த உதவித தொகை வழங்கப்படும். இதற்காக 1.5 மில்லியன் பவுண்ட் நிதி வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த தொகையை எரன்டா அறக்கட்டளையும், பார்தி அறக்கட்டளையும் அன்பளிப்பாக அளித்துள்ளன.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயர்நிலைப் பட்டயக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மன்மோகன் சிங் பெயரால் ஏற்கனவே உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர் என்பதும் பொருளாதாரப் பாடத்தில் முதல் மாணவராக விளங்கினார் என்பதும் குறிப்பிடத்த்ககது.

திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. வெற்றி

Published on: //
திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க.  வேட்பாளர் லதா அதியமான் 39, 266 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த முத்துராமலிங்கம் 40, 156 வாக்குள் பெற்றார். வாக்கு விவரம் வருமாறு:

மொத்த வாக்குகள் : 1, 55, 647
பதிவானவை : 1, 38, 191

தி.மு.க. : 79, 422
அ.தி.மு.க. : 40, 156
தே.மு. தி.க. : 13, 136
ச.ம.க. : 831
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!