Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கேம்பிரிட்ஜ் பல்கலை: இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை

Published on திங்கள், 12 ஜனவரி, 2009 1/12/2009 05:25:00 PM // ,

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டய கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க இருப்பதாக இன்று அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பெயரால் இந்த உதவித் தொகை அறியப்படும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் அலிசன் ரிச்சர்ட் கூறினார்.


உதவித் தொகை தேவைப்படும் மாணவர்களுக்கு அவர்கள் எந்தப் பிரிவு பாடம் படித்தாலும் கல்விக் கட்டணம் உள்பட மற்ற செலவுகளுக்கு இந்த உதவித தொகை வழங்கப்படும். இதற்காக 1.5 மில்லியன் பவுண்ட் நிதி வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த தொகையை எரன்டா அறக்கட்டளையும், பார்தி அறக்கட்டளையும் அன்பளிப்பாக அளித்துள்ளன.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயர்நிலைப் பட்டயக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மன்மோகன் சிங் பெயரால் ஏற்கனவே உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர் என்பதும் பொருளாதாரப் பாடத்தில் முதல் மாணவராக விளங்கினார் என்பதும் குறிப்பிடத்த்ககது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!