Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாலஸ்தீனில் மசூதி உள்பட 20 இடங்களில் தாக்குதல்

Published on: வெள்ளி, 2 ஜனவரி, 2009 //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த ஒரு வாரமாக விமான தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. அதன் கடற்படை கப்பலிலிருந்தும் தாக்குதல் தொடுக்கப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை 428 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 2100க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப் பட்டோரில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான நிசார் ரய்யான் மற்றும் அவரது குடும்பத்தினரும் அடங்குவர்.

ஏழாம் நாளான இன்று காஸா பகுதியில் உள்ள மசூதி ஒன்றும் ஹமாஸ் தலைவர்களின் வீடுகளும் குறிவைத்து தாக்கப் பட்டன. தாக்கப்பட்ட மசூதியில் ஹமாஸ் ஆதரவாளர்கள் பதுங்கியிருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

இந்நிலையில் இன்று ஹமாஸ் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதலைத் தொடுத்தது. சுமார் 40 கி.மீ.தூரம் சென்ற இந்த ஏவுகணைகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஒரு நகரில் விழுந்ததாகவும் இதில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கஷ்மீரில் துப்பாக்கிச் சன்டை

Published on: //
ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் இராணுவத்தினருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சன்டை நடந்து வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன. இதில் ராகேஷ்குமார், ஏ.பி. சிங் ஆகிய இராணுவ வீரர்கள் உயிரிழிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிவினைவாதிகள் தரப்பிலான சேதம் குறித்து இதுவரை தகவல் இல்லை.

கிளிநொச்சியில் இலங்கை இராணுவம்?

Published on: //
விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியில் இலங்கை இராணுவம் நுழைந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இன்று காலை இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சியில் நுழைந்து கொண்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக வியாழனன்று கிளிநொச்சியின் அருகாமையில் உள்ள பரந்தன் எனும் நகரை இராணுவத்தினர் கைப்பற்றி விட்டதாகவும் 48 மணி நேரத்திற்குள் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறியிருந்தன.

பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்.

Published on: //
தெற்கு பாகிஸ்தானிலுள்ள பழங்குடியினர் வாழும் பகுதியான வசீரிஸ்தானில் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிலுள்ள இராணுவமையத்திலிருந்து வஸீரிஸ்தானிலுள்ள காரிக்கோடு கிராமத்தின் மீது அமெரிக்கப்படையினர் மூன்று ஏவுகணைகளை வீசினர்.பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகளில் அமெரிக்கத்தாக்குதல் இதற்கு முன்னரும் நடந்துள்ளது. அமெரிக்கப்படைகள் பாகிஸ்தானிற்குள் அத்துமீறி நடத்தும் இத்தகைய தாக்குதல்களைப் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!