Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஜெகதீஷ் டைட்லர் விலகினார்

Published on வியாழன், 9 ஏப்ரல், 2009 4/09/2009 06:56:00 PM // , , , , ,

மக்களவைத் தேர்தலில் டெல்லி வடகிழக்குத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தவர் ஜெக்தீஷ் டைட்லர். இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்திற்கு டைட்லரே காரணம் என்று எதிர்கட்சிகள் கூறிவந்தன. ஆயினும் சிபிஐ விசாரணையில் குற்றமற்றவர் என்று அண்மையில் டைட்லர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக, பத்திரிக்கையாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது கேள்விகளும் செருப்பும் வீசப்பட்டன.

இந்நிலையில், பிரச்னைகளுக்குத் தான் காரணமாக இருக்கவிரும்பவில்லை என்று கூறி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்குவதாக 65 வயதாகும் ஜெக்தீஷ் டைட்லர் கூறியுள்ளார். தனது முடிவை சோனியாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதே தொகுதியில் இவர் மூன்று முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!