Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

நாடாளுமன்றத்தில் அதிக கேள்விகள் கேட்டவர் கார்வேந்தன்

Published on திங்கள், 16 மார்ச், 2009 3/16/2009 01:29:00 PM // , , , , , , ,

கடந்த ஐந்தாண்டுகால நாடாளுமன்றக் கூட்டங்களில் அதிக கேள்விகள் கேட்டவர் மற்றும் அதிக விவாதங்களில் பங்கு பெற்றவராக தமிழகத்தைச் சார்ந்த காங்கிரஸ் உறுப்பிர் கார்வேந்தன் அறிவிக்கப் பட்டுள்ளார்.

பழனி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் சுமார் 1200 கேள்விகள் கேட்டுள்ளார். 187 விவாதங்களில் பங்குபெற்றுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகெளடா, திரினாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜி, நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகர் கோவிந்தா ஆகியோர் கடந்த 14ஆவது நாடாளு மன்றக் கூட்டங்களில் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சுமார் 67 உறுப்பினர்கள் 10 அல்லது அதற்கும் குறைவான கேள்விகளையே கேட்டுள்ளனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!