Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 28, 2025

சென்னை: நடுக்கடலில் அமையும் சரக்குப்பெட்டக

Published on திங்கள், 16 மார்ச், 2009 3/16/2009 01:05:00 PM // , , , , , ,

சென்னை துறைமுகத்தில் தற்போது சரக்குகளை ஏற்றி இறக்குவதில் உள்ள இடப்பற்றாக்குறை சிரமம் உள்ளது. இதனைத் தவிர்க்க, கூடுதலாக மேலும் ஒரு சரக்குப்பெட்டக முனையம் (Container Terminal) அமைக்க முடிவு செய்யப்பட்டு அதன்படி, சென்னை துறைமுகத்தில் இரண்டாவது ச.பெ.முனையம் அமைத்து அதன் பணிகள் முடிவு பெற்றுள்ளன. இரண்டொரு மாதங்களில் இந்த முனையம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

இந்நிலையில், மேலும் ஒரு புதிய முனையம் அமைக்க மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து இரண்டு கி.மீ தூரத்தில் நடுக்கடலில் மாபெரும் முனையம் அமைக்கப்படவுள்ளது. மூன்றாயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த முனையம் 22 மீட்டர் ஆழமும், இரண்டு கி.மீ வரை நீளமும் கொண்டதாக இருக்கும். இந்த முனையத்திற்குச் செல்ல கடலுக்குள் இரண்டு கி.மீ தூரம் வரை சாலையும் அமைக்கப்படவுள்ளது.

சீனாவின் புகழ்பெற்ற ஷாங்காய் துறைமுகத்தில் 25 கிலோமீட்டர் தூரத்தில் கடலில் அமைந்துள்ள சரக்கு முனையத்துக்கு அடுத்தபடியாக பெரிய கடல் முனையம் சென்னை துறைமுகத்திலேயே அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!