Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கள்ளத்தனமான துப்பாக்கித் தொழிற்சாலைகள் கண்டுபிடிப்பு

ஒன்றல்ல; இரண்டல்ல பத்து துப்பாக்கித் தொழிற்சாலைகள் சட்டவிரோதமாகச் செயற்பட்டு வந்ததை பீகார் மாவட்ட காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
முங்கீர் மாவட்டத்தில் உள்ள ஹசரத்கஞ்ச் என்ற இடத்தில் 10 கைத்துப்பாக்கித் தொழிற் சாலைகள் முறைகேடாக செயல்பட்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது.


அனுமதி பெறாமல் தயாரிக்கப்பட்டிருந்த ஏராளமான கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு லாரிகளில் ஏற்றி காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.இந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இதுவரை கைது செய்யப் படவில்லை.

இதன்றி, இப்பகுதியில் செயல்பட்டு வந்த இரண்டு கள்ளச்சாராய தொழிற்சாலைகளில் திடீர் சோதனை நடத்தி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளச் சாராயத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!