Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

உயர்நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு கோரி அரசுக்கு கடிதம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி நிகழ்வுற்ற காவல்துறை-வழக்குரைஞர் மோதல் சம்பவத்துக்குப் பின் வழக்குரைஞர்கள் இதுவரை பணிக்குத் திரும்பவில்லை.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக லக்ஷ்மண் கோகலே நாளை மறுநாள் பதவியேற்கவிருக்கிறார்.

புதிய தலைமை நீதிபதியின் பதவியேற்பை முன்னிட்டும் மீண்டும் பணிக்குத் திரும்ப விரும்பும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசுக்கு பதிவாளர் மாலா கடிதம் எழுதியுள்ளார். நீதிமன்றம், நீதிபதிகள், வழக்குரைஞர்கள் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!