Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா நியூசிலாந்தை வென்றது

நேப்பியரில் இன்று நடைப்பெற்ற முதலாம் ஒருநாள் மட்டைப்பந்து ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது. மழை குறுக்கிட்டதன் காரணமாக டக்வெர்த்-லூயிஸ் முறைப்படி பந்துவீச்சு சுற்றுகள் வெகுவாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்தியா 38 சுற்றுகளுக்கு 4 ஆட்டக்காரர்களை இழந்து 273 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் தோனி ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களும், துணைத்தலைவர் சேவாக் 77 ஓட்டங்களும், ரெய்னா 66 ஓட்டங்களும், யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

அதன்பின் நியூசிலாந்து ஆடிய 17ஆவது சுற்றில் மீண்டும் மழை குறுக்கிட நியூசிலாந்துக்கான இலக்கு 28 சுற்றுகளில் 215 ஓட்டங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து 9 ஆட்டக்காரர்களை இழந்து 162 ஓட்டங்களையே எடுத்தது.இதனால் இந்தியா 53 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் தரப்பில் ஹர்பஜன்சிங் மூவரையும் பிரவீன் குமார் இருவரையும் ஜாஹிர்கான், யுவராஜ் சிங், யூசுப் பதான் ஆகியோர் தலா ஒருவரையும் ஆட்டமிழக்கச்செய்தனர்.

கடந்த 20-20 ஆட்டங்கள் இரண்டிலும் நியூசிலாந்திடம் தோற்றிருந்த இந்தியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!