Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

"இந்தியா ஒளிர்கிறது" தவறான பிரச்சாரம் - அத்வானி!

Published on செவ்வாய், 3 மார்ச், 2009 3/03/2009 04:48:00 PM // , , , , , , , ,

"இந்தியா ஒளிர்கிறது" என்ற தவறான பிரச்சாரமும் அளவுகடந்த தன்னம்பிக்கையுமே 2004 ல் நடந்த மக்களவை தேர்தலில் என்.டி.ஏ தோல்வியடைந்ததற்கான காரணங்கள் என பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறினார்.

அடல் பிகாரி வாஜ்பேய் அவர்களின் தலைமையில் நல்லதொரு ஆட்சி நடத்திக் காட்டியதால் மீண்டும் அரசமைக்க இயலும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்தோம் என பாஜக வணிகர்கள் பிரிவு கூட்டத்தில் பேசும் பொழுது அத்வானி நினைவு கூர்ந்தார்.

"நாங்கள் வெற்றி பெறுவோம் என எதிராளிகளோ அல்லது அரசியல் பார்வையாளர்களோ கருதவில்லை. அளவுக்கதிகமான தன்னம்பிக்கையே தோல்விக்கான முதல் காரணமாகும் - இரண்டாவது "இந்தியா ஒளிர்கிறது" என்ற தவறான பிரச்சாரங்களுமாகும்" என அவர் தொடர்ந்து பேசினார்.

"உங்களின் வீடுகள் ஒளிர்கின்றதா என்ற எதிராளிகளின் கேள்விக்கு முன்னால் அனைவருக்கும் பிரச்சனைகளே இருந்தன. வீடுகள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் நாட்டில் இப்பொழுதும் வறுமை நிலைநிற்கின்றது. விவசாயிகளுக்கும் அவர்களுக்கான பல பிரச்சனைகள் இருக்கின்றன. நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2004 ல் அடிதட்டு மக்களின் ஓட்டுகளைக் கொண்டு ஆட்சியினைக் கைப்பற்றிய யு.பிஏ வை இம்முறை மக்கள் கீழே இறக்குவர்" என்றும் அவர் பேசினார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!