Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 27, 2025

தன் மகளையே வன்புணர்ந்ததாக பா.ஜ.க. தலைவர் கைது!

Published on வியாழன், 26 மார்ச், 2009 3/26/2009 03:08:00 AM // , , , , , , ,

பஞ்சாப் மாநிலம் அஜ்னலா நகர பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் அஷோக் தனேஜா தன்னுடைய மகளை கடந்த 7 ஆண்டுகளாக வன்புணர்ந்து வந்தார் என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில் புதன் கிழமையன்று கைது செய்யப் பட்டார்.

24 வயதுடைய அவரது மகள் அஜ்னலா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமிர்தசரஸ் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். குற்றம் சுமத்திய அந்தப் பெண் தன்னுடைய தாயாருடன் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கைப் பதிவு செய்த காவல் துறையினர் தனேஜாவை கைது செய்தனர். அவர் தனக்குக் கடுமையாக நெஞ்சு வலிப்பதாகக் கூறியதை அடுத்து அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!