Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Friday, April 11, 2025

ஜப்பான் கரையருகே சரக்குக் கப்பல்கள் மோதல்!

Published on செவ்வாய், 10 மார்ச், 2009 3/10/2009 09:44:00 AM // , , , , , , ,

ஜப்பானின் பல தீவுகளில் ஒன்றான இசு ஒஷிமோ தீவின் கரையருகே இரு சரக்குக் கப்ப்பல்கள் மோதிக் கொண்டன. இவற்றில் ஒன்று தென்கொரியாவைச் சேர்ந்தது என்றும் இன்னொன்று பனாமாவைச் சேர்ந்தது என்றும் தெரிய வந்துள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் 16 ஊழியர்கள் இருந்ததாகவும், கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பானிய கரையோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

மோதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் காணாமல் போன தென்கொரியக் கப்பலைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. பனாமாவைச் சேர்ந்த கப்பல் பலத்த சேதத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அக்கப்பலில் இருந்தோர் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!