Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

காவலர் பயிற்சி மையத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் - 28 பேர்

Published on ஞாயிறு, 8 மார்ச், 2009 3/08/2009 06:22:00 PM // , , ,

இராக்கின் தலைநகர் பக்தாதில் உள்ள காவலர் பயிற்சி மையத்தின் அருகில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 58 பேர் காயமுற்றனர்.

தன்னுடைய உடலில் குண்டுகளைக் கட்டிக்கொண்டு மத்திய பாக்தாதில் உள்ள பாலஸ்தீன் சாலையில் கூட்டத்தினுள் புகுந்த சைக்கிளில் வந்த ஒருவர் குண்டுகளை வெடிக்கச் செய்தார் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலியான 28 பேரில் காவலர்கள் மற்றும் காவல் பணிக்கு விண்ணப்பித்தோரே அதிகம் என்றும் அதிகாரிகள் கூறினர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!