Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 12, 2025

திருத்தப்பட்ட விடைத்தாளை மாணவர்

Published on வியாழன், 12 பிப்ரவரி, 2009 2/12/2009 02:34:00 PM // , , , , ,

கொல்கத்தாவைச் சேர்ந்த ப்ரிதம் ரூஜ் கொல்கத்தாவின் பிரசிடெண்சி கல்லூரியில் கணிதவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இரண்டாம் ஆண்டு தேர்வில் அவர் ஒரு பாடத்தில் 28 மதிப்பெண் மட்டுமே பெற்று தேர்வில் தவறியதாக முடிவு சொல்லப்பட்டது. இதனால் அவர் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தார். அதன் பிறகு பல்கலைக்கழகம் அவர் 32 மதிப்பெண் பெற்று தேர்வு பெற்று விட்டதாக அறிவித்தது.

இதில் திருப்தி அடையாத அந்த மாணவர், விடைத்தாளை தான் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இம்மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் " மாணவர்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்வதற்காக திருத்தப்பட்ட விடைத்தாளை பார்ப்பதில் தவறில்லை" என்றும் இதற்காக, குறிப்பிட்ட காலம் ஒதுக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!