Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஆஸ்திரேலிய காட்டுத்தீ சாவு எண்ணிக்கை உயர்வு!

Published on திங்கள், 9 பிப்ரவரி, 2009 2/09/2009 11:32:00 PM // , , , , , , , ,

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்போர்னை ஒட்டியுள்ள பகுதிகளில் கடும் காட்டுத்தீ பரவி கடும் நாசத்தை ஏர்படுத்தி வரும் செய்தியை முன்னர் பதிந்திருந்தோம். தற்போது இக்காட்டுத்தீ மேலும் பரவி 170 உயிர்களை இதுவரை பலி கொண்டுள்ளது. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அரசு அலுவலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

காட்டுத்தீயிலிருந்து தப்பிக்கக் கார்களில் ஏறிப் புறப்பட முயன்ற போது காரிலிருந்தவாறே எரிந்து தீயில் கருகிப் பலர் இறந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகக் கடுமையான இயற்கைப் பேரழிவாக இதைக் கருதுவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!