Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 21, 2025

ஜனாதிபதி மாளிகை அருகே வாலிபர்

Published on ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009 2/15/2009 09:32:00 PM // , , ,

டெல்லியில் விஜய் செளக் என்ற இடத்தில் தான் இந்திய ஜனாதிபதி மாளிகையும் பிரதமர் அலுவலகமும் உள்ளன. நாட்டில் எப்போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் பகுதியாகும் இது.

அந்த பலத்த பாதுகாப்பையும் மீறி நேற்று பிற்பகல் 31/2 மணியளவில் ஒருவாலிபர் தன்னுடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் தீயணைப்புத்துறையினர் ஓடிவந்து தீயை அணைத்து அந்த வாலிபரை இராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தீக்குளித்த அந்த வாலிபர் பெயர் அபிசேக் குமார் (32 வயது) என்றும், ஜார்க்கண்டைச் சேர்ந்தவர் என்றும், குவைத்தில் பிளம்பராகப் பணிபுரிந்து வந்தவர், பணி இழந்து நாடு திரும்பியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

70 சத தீக்காயத்துடன் காணப்படும் அபிசேக் தீவிர மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாரைச் சந்திப்பதற்காக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அந்தப்பகுதி வந்தார் என்று தெரியவில்லை.

தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!