Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

என்றாவது ஒருநாள், பிரதமர் ஆவேன் லாலு சொல்கிறார்

Published on சனி, 14 பிப்ரவரி, 2009 2/14/2009 08:37:00 PM // ,

என்றாவது ஒருநாள், பிரதமர் ஆவேன் லாலு சொல்கிறார்


புதுடெல்லி, பிப்.14-

ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ், பிரதமர் பதவி மீதான தனது ஆசையை அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார். நேற்றும் அவர் பிரதமர் ஆக விருப்பம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த லாலுவிடம், "தேர்தலுக்கு பிறகு நீங்கள் மீண்டும் ரெயில்வே மந்திரி ஆவீர்களா?'' என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு லாலு, "நான் என்ன ஆவேன், என் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதெல்லாம் கடவுள் நிர்ணயித்த விதிப்படிதான் நடக்கும். கடவுள் என் நெற்றியில் என்ன எழுதி இருக்கிறோரோ? எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் என்றாவது ஒருநாள், நான் பிரதமர் ஆவேன்'' என்று பதில் அளித்தார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!