Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

முக்கிய மாவோ தலைவர் சரண்டர்

Published on திங்கள், 16 பிப்ரவரி, 2009 2/16/2009 03:50:00 PM // , , , , , , ,

தடைசெய்யப்பட்ட மாவோ கம்யூனிஸ்டின் ஆந்திர மாநில முக்கியத் தலைவர்களில் ஒருவரான சாம்பசிவடு காவல்துறையிடம் சரணடைந்தார்.

கடந்த ஒரு வருடமாகத் தேடப்பட்டு வந்த அவர் நேற்று ஆந்தி மாநில காவல்துறை தலைமையகத்தில் காவல் துறை உயர் அதிகாரி முன் சரணடைந்ததாகத் தகவல் கூறுகின்றன. இந்த தகவலை ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி உறுதி செய்தார். இதுகுறித்து மேலதிக தகவல் தர அவர் மறுத்துவிட்டார்.

கொனாகுரி அய்லையா என்ற இயற்பெயருடை சாம்பசிவடு, 2003 ஆம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொலை செய்ய முயன்றது உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு 10 இலட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப் பட்டிருந்தது.

தெலுங்கானா பகுதியின் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2006 ஆம் ஆண்டு மாவோ தலைவராக இருந்த மாதவ் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அந்த இயக்கதின் முக்கியத் தலைவராய் உயர்ந்தார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!