Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

முன்னாள் இராணுவ வீரர்கள் அதிருப்தி

Published on ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 2/08/2009 05:34:00 PM // , , , , ,

ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் அதிருப்தியுற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் அரசு தமக்களித்த விருதுகளையும் பதக்கங்களையும் திருப்பித்தர முடிவு செய்துள்ளனர்.

ஆறாவது ஊதியக்குழு இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய கணக்கீட்டை நான்கு கால அளவுகளாகப் பிரித்து பரிந்துரைத்திருந்தது.

அதன்படி 1996க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு அளவீடும், 1996 முதல் 2005 வரை பணிபுரிந்தவர்களுக்கு வேறு, 2006 முதல் 2008 செப்டம்பரில் ஓய்வு பெற்றவர்களுக்கு தனி, அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு பிறிதொரு கணக்கிலும் ஓய்வூதியம் பரிந்துரைக்கப்பட்டது .

1996ல் பணிஓய்வுபெற்ற ஒரு ஹவில்தாரைக் காட்டிலும் 2006ல் ஓய்வு பெற்ற சிப்பாய் கூடுதலாக ஓய்வூதியம் பெறுவதாக இக்கணக்கீடு அமைந்துள்ளதாகக் கூறி, ஆறாவது ஊதியக்குழுவில் தங்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்று இராணுவ வீரர்கள் டெல்லியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் தெரிவித்தனர்.

இந்தியாவின் தூண்களாகக் கருதப்படும் இராணுவ வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கடற்படை முன்னாள் தலைவர் அட்மிரல் சுஷீல்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!