Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

பெங்களூரூவில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு

Published on புதன், 4 பிப்ரவரி, 2009 2/04/2009 12:53:00 AM // , , , , ,

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட தீவிரவாத எதிர்ப்பு மாநாடு ஒன்று கர்நாடக மாநிலத்தலைநகர் பெங்களூரூவில் அரண்மனை மைதானத்தில் நடந்தேறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜமியியத் யே உலமாயே ஹிந்த் என்ற முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் ஹிந்து, இஸ்லாமிய அறிஞர்களும் பங்கேற்றுள்ளனர்.

தீவிரவாதம் அதன் எல்லா வடிவங்களிலும் எதிர்க்கப்படவேண்டும் என்று இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியும் மக்களிடம் பெறப்பட்டது.

ஜம்யியத்துல் உலமா யே ஹிந்த் தலைவர் சையத் முஹம்மத் உஸ்மான், பாராளுமன்ற உறுப்பினர் மெளலானா மஹ்மூது மதனி, ஆரிய சமாஜின் சுவாமி அக்னிவேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர், ஹிந்தி திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ்பட் ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரபலங்களில் சிலர்.

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் சார்பற்று செயல்படுவதற்கும், அண்மைக்காலத்தில் புதிதாக அறிய வந்துள்ள தீவிரவாதங்களின் கைவரிசைகள் குறித்த நேர்மையான விசாரிப்புக்கும் இம்மாநாடு அரசை வலியுறுத்தியுள்ளது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!