Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சிறுவனுக்கு ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணை

Published on வியாழன், 12 பிப்ரவரி, 2009 2/12/2009 02:50:00 PM // , , , , ,

டில்லியில் ஒரு சிறுவனுக்கு மாநில அரசு 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க டில்லி உயர்நீதி மன்றம் புதன் கிழமையன்று உத்தரவிட்டது.


உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த திரு என்ற சிறுவன் டில்லியின் வடமேற்குப் பகுதியில் உள்ள டிமார்பூர் என்ற பகுதியில் அத்தை வீட்டில் தங்கி 7ஆம் வகுப்பு பயின்று வருகிறான். சில நாட்களுக்கு முன் அவன் பள்ளி செல்லும்போது வழியில் கட்டிடப் பணி நடந்து கொண்டிருந்தது. கட்டிடத்தின் மேலிருந்து கழிவுகளை முன் அறிவிப்பின்றி கொட்டியதில் சிறுவனின் தலையில் பலத்த அடி பட்டது. அவனது மன நிலையும் பாதிக்கப்பட்டது. சிறுவன் இப்போது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!