Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 26, 2025

மூன்றாவது அணி குறித்து ஆலோசிக்கும் சிபிஐ!

Published on வெள்ளி, 9 ஜனவரி, 2009 1/09/2009 04:03:00 PM //

சிபிஎம் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் கொச்சியில் ஆரம்பித்தது. இக்கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாள் இறுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றாக மூன்றாம் அரசியல் முன்னணி குறித்து எவ்வித முடிவும் பெறப்படாமல் கூட்டம் முடிவு பெற்றது.

"காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றான மூன்றாம் முன்னணி, அரசியல் சூழல்களை அவதானித்து முடிவு செய்வோம்" என சிபிஎம் மத்திய கமிட்டி உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறினார்.

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பது குறித்து கட்சி ஆலோசித்து வருவதாகவும் கூட்டணியில் பல கட்சிகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அதற்கான சலனங்கள் கிடைக்கத்துவங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!