Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மலேகான்: ஸ்ரீராமசேனா தலைவனிடம் விசாரணை!

Published on வெள்ளி, 30 ஜனவரி, 2009 1/30/2009 01:36:00 PM //

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், கர்நாடகாவிலுள்ள் ஸ்ரீராமசேனா தலைவன் பிரமோத் முத்தலிக்கிடம் மும்பை தீவிரவாத தடுப்புப் படை விசாரணை செய்ய இருக்கிறது. பெண்களைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முத்தலிக்கிடம் விசாரணை நடத்த, ஏடிஎஸ் குழு உடனடியாக மங்கலாப்புரத்திற்குப் புறப்படும் என ஏடிஎஸ் தலைவர் ரகுவன்சி தெரிவித்தார்.

மலேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் பெண் சன்னியாசி ப்ரக்யா சிங் தாக்கூரைப் புகழ்ந்து உடுப்பியில் முத்தலிக் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். மேலும் முத்தலிக்கின் செயல்பாடுகளை, மாலேகான் வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கர்னல் பிரசாத் புரோஹித்வெகுவாக புகழ்ந்ததாகவும் அவர்கள் இருவரும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளதாகவும் சில பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக விசாரணை நடத்தவும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முத்தலிக்கிற்குத் தொடர்பு உண்டா என்பதைக் குறித்து விசாரிக்கவுமே ஏடிஎஸ் கர்நாடகா வர இருக்கிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!