Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஜெர்மனி பெண்ணை கடத்திக் கற்பழித்த ஐவருக்கு வாழ்நாள் சிறை

Published on வியாழன், 29 ஜனவரி, 2009 1/29/2009 09:53:00 AM // , , , , , ,

ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு மாவட்ட நீதி மன்றம் வழ்நாள் சிறைத் தண்டனை விதித்தது.


கடந்த செப்டம்பர் மாதம் ஜெர்மனியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை ஐந்து நட்சத்திர விடுதியிலிருந்து கடத்திச் சென்று கற்பழித்தனர் என்று இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அம்பாலா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்குள் விசாரித்து வழக்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ராஜ் சேகர் அட்ரி குற்றம் சாட்டப்பட்ட ஐந்துபேரும் குற்றவாளிகள் என்றும் ஐந்து பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை அளிப்பதாகவும் தனது தீர்ப்பை அறிவித்தார்.

பங்கஜ் புனியா, மன்வீர் சிங் ஜோலி, ஹர்பீத் சிங் டல்லி, சுக்வீந்தர் சிங் சுகி மற்றும் சோம்பால் என்று அறியப்படும் ஐந்து குற்றவாளிகளும் அம்பாலா மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்றும் 20 வயதினர் என்றும் தெரிய வருகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!