Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

பதவி விலகு- ஒரிஸா அரசுக்கு உச்சநீதிமன்றம்

Published on செவ்வாய், 6 ஜனவரி, 2009 1/06/2009 12:20:00 PM //

ஒரிஸாவில் சிறுபான்மையினரான கிருத்துவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க இயலவில்லையெனில் பதவியை விட்டு விலகும்படி உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ, பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தக் கண்டனத்தைத் தெரிவித்தது.

கிருத்துவர்கள் மீது வி.எச்.பி.யினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பற்ற நிலையில் சிறுபான்மையினர் காடுகளுக்குள் ஒளிந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட பெஞ்ச் இதை அனுமதிக்க முடியாது என்று கூறியது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!